செய்திகள்

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவை: ஸ்டாலின் உறுதி

புதுவை, டிச. 12–

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்லத் திருமண விழவில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆற்றிய உரையில் கூறியதாவது:–

புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு. தலைவர் கலைஞர் கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம்.

திராவிட மாடல் தேவை

புதுச்சேரியில் துணைநிலை ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திமுகவின் ஆட்சி நிச்சயம் மீண்டும் அமையும்.

தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது நடக்கும ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *