முழு தகவல்

கட்டிடக்கலை சாதனையாளர் பத்ம விபூஷன் பி.வி.தோஷி!

இந்திய கட்டிடக்கலை நிபுணர்களில் குறிப்பிடத்தக்கவர் பி.வி. தோஷி எனப்படும் பால்கிருஷ்ண தோஷி. அண்மையில் இவருக்கு, இந்தியாவின் இரண்டாவது மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது வழங்கப்பட்டது. தனது 95வது வயதில் காலமான இவர், கட்டடக் கலைக்கான சர்வதேவ விருதான பிரிட்ஸ்கர் கட்டிடக்கலை பரிசு பெற்ற ஒரே இந்தியர் ஆவார். மேலும் பிரான்ஸ் நாட்டின் கட்டட கலை விருதையும் பெற்றுள்ளார்.

பத்ம விபூஷன் விருது பெற்ற தோஷி, அகமதாபாத்தைச் சேர்ந்த சுற்றுச்சூழல் மற்றும் திட்டமிடல் தொழில்நுட்ப மையம் (CEPT) மற்றும் மகாத்மா காந்தி தொழிலாளர் நிறுவனம் ஆகியவற்றின் புகழ்பெற்ற கட்டிடங்களை வடிவமைத்ததற்காக நன்கு அறியப்பட்டவர். அவரது கட்டிடக்கலை பாணி – ஐரோப்பிய நவீனத்துவ, மிருகத்தனமான கட்டிடக்கலை மற்றும் இந்திய உணர்வுகளின் கலவை – பல இதயங்களை வென்றது.

குறைந்த விலை வீடு

மேலும் தோஷி குறைந்த விலை வீடுகளுக்கான வடிவமைப்புகளையும் உருவாக்கி புகழ்பெற்றுள்ளார். மத்திய பிரதேசம் இந்தூரில் உள்ள ஆரண்யா குறைந்த விலை வீட்டுவசதி குடியிருப்புகள், அவருக்கு கட்டிடக்கலைக்கான 6வது ஆகா கான் விருதை பெற்றுத்தந்தது.

தோஷி, புகழ்பெற்ற கட்டிடக்கலை பற்றிய பல புத்தகங்களையும் எழுதியுள்ளார். பால்கிருஷ்ண தோஷி: கட்டிடக்கலை மற்றும் அடையாளத்திற்கான எழுத்துகள் (2019), பால்கிருஷ்ண தோஷி: மக்களுக்கான கட்டிடக்கலை (2019) ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இதற்கிடையில், சர்வதேச கட்டிடக் கலைஞர்கள் தோஷி பற்றிய புத்தகத்தையும் எழுதி முடித்தனர். இதில் வில்லியம் ஜே. ஆர். கர்டிஸ் எழுதிய “பால்கிருஷ்ண தோஷி: இந்தியாவிற்கான கட்டிடக்கலை” 2014 இல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

கட்டிடக்கலை உலகில் மிகவும் புகழ்பெற்ற இந்திய மனங்களில் ஒருவரான பி.வி. தோஷி, கடந்த 2023 ஜனவரி 24 ந்தேதி தனது 95 வயதில் காலமானார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *