சென்னை, ஏப். 8–
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை கடந்த 2 நாட்களாக உயர்ந்தது போலவே, சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.8 உயர்ந்து, ரூ.4,882 க்கு விற்பனையாகிறது. அதன்படி, சவரனுக்கு ரூ.64 உயர்ந்து, ரூ.39,056 க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதே போன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து, ரூ.71.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.71,300-க்கும் விற்பனையாகிறது. தங்கம் விலை பிப்ரவரி முதல் வாரத்தில் இருந்து படிப்படியாக உயர்ந்து வரும் நிலையில், இன்று ஆபரணதங்கத்தின் விலை சவரன் ரூ.39 ஆயிரத்தை தாண்டியிருப்பது நகை பிரியர்களுக்கு அதிர்ச்சியை தந்துள்ளது.