காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை புதுடெல்லி, அக்.12- காவிரியில் இருந்து கர்நாடகம், தமிழகத்துக்கு 3 ஆயிரம் கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு பரிந்துரை செய்துள்ளது. தமிழ்நாட்டுக்கும், கர்நாடகத்துக்கும் இடையே காவிரி நீர் பங்கீட்டு விவகாரம் பிரச்சினையாகி உள்ள நிலையில், காவிரி ஒழுங்காற்றுக்குழுவின் 88-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் டெல்லியில் இருந்து காணொலி வாயிலாக நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கர்நாடகம் உள்ளிட்ட 4 மாநில அதிகாரிகளும் அந்தந்த […]