செய்திகள் நாடும் நடப்பும்

சினிமாத் துறைக்கு பொற்காலம், ஆனால் ரசிகர்கள் வராமல் போவதால் தவிக்கும் திரையரங்குகள்!

ஆர். முத்துக்குமார் பண்டிகை நெருங்கி விட்டால் தமிழகமெங்கும் என்ன படம் ரிலீசாகப் போகிறது? என்ற விவரம் எல்லோர் இல்லங்களிலும் இருக்கும். சமீப காலங்களில் உச்ச நட்சத்திரங்களின் படங்களைத் தவிர திரையரங்குகளில் ஆள் நடமாட்டம் இருப்பதாகவே தெரியவில்லை. ஆங்கிலப் படங்களும் வேற்று மொழி திரைப்படங்களும் பெருவாரியாக தமிழ் அல்லது ஆங்கிலத்தில் அடி வசனங்களுடன் இருப்பதால் ஓடிடி தளங்களில் ரசிக்கப்படுகிறது. இது தமிழ்த் திரை உலகிற்கு பெரிய இழப்பாக இருக்காது என்றாலும் திரையரங்கங்கள் வெறிச்சோடி காணப்படுவதால் அங்கேயெல்லாம் அடுத்த 5 […]

Loading

செய்திகள்

மாணவர்களிடையே குறைபாடு இருந்தால் கண்டறிய ‘நலம் நாடி’ செயலி

அமைச்சர் மகேஸ் பொய்யமொழி இயக்கி வைத்தார் 9,870 மாணவர்களுக்கு தலா ரூ.200 ஊக்கத்தொகை வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தும் திட்டம் துவக்கம் சென்னை, ஜன.9– மாற்றுத்திறனாளி மாணவர்கள் தங்களது கல்வியினை எவ்வித தடையுமின்றி பெற வேண்டும் என்ற அக்கறையில் தமிழ்நாடு அரசு பல முக்கியமான முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது. மாணவர்களிடையே ஏதேனும் குறைபாடுகள் இருப்பின் அதனைக் கண்டறியவே “நலம் நாடி” எனும் செயலி தற்போது உருவாக்கப்பட்டுள்ளது. சிறப்புப் பயிற்றுனர்கள் இச்செயலியைப் பயன்படுத்தி குறைபாடுகளை எளிதில் கண்டறிவார்கள். மாணவர்களுக்கு […]

Loading

செய்திகள்

தமிழ்நாடு முழுவதும் 95% பேருந்துகள் இயக்கம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்

போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம் பிசுபிசுத்தது சென்னை, ஜன. 9– போக்குவரத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டம் அறிவித்த நிலையில் தமிழ்நாடு முழுவதும் 95% பஸ்கள் இயக்கப்படுவதாக – போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறினார். தமிழகத்தில் போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய ஒப்பந்தம் உட்பட பல்வேறு பிரச்சினை குறித்து, 7 அம்ச கோரிக்கைகளை முன்னிறுத்தி பேச்சுவார்த்தை இதுவரை 5 கட்டமாக நடைபெற்றுள்ளது. போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் பேச்சுவார்த்தையில் பங்கேற்றும் சுமூகமான ஒப்பந்தம் எட்டப்படவில்லை. இதனால் போக்குவரத்துக்கழக தொழிற்சங்கங்கள் இன்று முதல் வேலை […]

Loading

செய்திகள்

தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்தது

சென்னை, ஜன.9– தங்கம் விலை இன்று சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.46,560–-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்த நிலையில், இன்று மேலும் குறைந்துள்ளது. அதன்படி, சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு இன்று ரூ.80 குறைந்து ரூ.46,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.5,820-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், வெள்ளியின் விலை இன்று சற்று […]

Loading

செய்திகள்

பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கு: சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசின் கோரிக்கை நிகாரிப்பு

சென்னை, ஜன. 9– பெண் ஐ.பி.எஸ். அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் 3 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாசின் மேல்முறையீட்டை வழக்கை வேறு நீதிமன்றத்துக்கு மாற்றமுடியாது என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 2021-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 21-ந்தேதி டெல்டா மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணியில் அப்போதைய சட்டம்- ஒழுங்கு சிறப்பு டி.ஜி.பி. ராஜேஷ் தாஸ் ஈடுபட்டிருந்தார். அப்போது […]

Loading

செய்திகள்

பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு நீதி கேட்டு நடத்திய பயணத்துக்கு கிடைத்த வெற்றி: ஸ்டாலின் வாழ்த்து

சென்னை, ஜன.9– பில்கிஸ் பானு வழக்கு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:– சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது. குஜராத் மாநில பாரதீய ஜனதா அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் லாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது. தங்களுக்கு வேண்டியவர்கள் […]

Loading

செய்திகள்

ஸ்டான்லி மருத்துவமனையில்‌ மூளைச்சாவு அடைந்த நோயாளி உறுப்புகள்‌ தானம்‌

சென்னை, ஜன. 9– அரசு ஸ்டான்லி மருத்துவமனையில்‌ மூளைச்சாவு அடைந்த நோயாளியின்‌ உறுப்புகள்‌, அவர்களது குடும்பத்தினரால்‌ தானம்‌ செய்யப்பட்டது. சென்னை புழல்‌, என்எஸ்கே தெருவை சேர்ந்த பத்மா (வயது 42) 100 நாள்‌ வேலை செய்து கொண்டு வீட்டை பராமரித்து வந்தார்‌. இவரது கணவர்‌ பிரேம்குமார்‌ (வயது 53) மற்றும்‌ மகன்‌ ரித்திக்‌ ஜாய்‌ (வயது 14) அனைவரும்‌ சேர்ந்து வசித்து வந்தனர்‌. கடந்த 4.1.24 பிற்பகல்‌ 2.40 மணியளவில்‌ தன்னுடைய அம்மா வீட்டிற்கு சென்று இரு […]

Loading

செய்திகள்

இன்று தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், கன்னியாகுமரியில் மிக கனமழைக்கு வாய்ப்பு

சென்னை, ஜன. 9– ராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. பூமத்தியரேகையை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் கிழக்கு பகுதிகளில் இலங்கைக்கு தெற்கே, ஒரு வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்று தமிழகத்தில் அனேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் […]

Loading

செய்திகள்

விஜயகாந்த் உருவ படத்திற்கு மத்திய அமைச்சர் பியூஷ்கோயல் அஞ்சலி

பிரேமலதாவை நேரில் சந்தித்து ஆறுதல் சென்னை, ஜன.9- மறைந்த தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் வீட்டிற்கு நேரில் சென்ற மத்திய மந்திரி பியூஸ் கோயல், விஜயகாந்த் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த மாதம் 28-ந்தேதி அதிகாலை மரணம் அடைந்தார். இந்த நிலையில், தமிழகம் வந்த மத்திய அமைச்சர் பியூஷ்கோயல், சென்னை சாலிகிராமத்தில் உள்ள மறைந்த விஜயகாந்த் வீட்டிற்கு நேற்று நேரில் சென்றார். அங்கு, விஜயகாந்த்தின் உருவ […]

Loading

செய்திகள்

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வண்டலூர் உயிரியல் பூங்கா 16-ந்தேதி திறந்திருக்கும்

வண்டலூர், ஜன.9- சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். வருகிற பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர்பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக், மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கரும்பு, புகையிலை பொருட்கள், மது பொருட்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். […]

Loading