செய்திகள்

சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு: ஜியோ – ஸ்பேஸ் எக்ஸ் இடையே கடும் போட்டி

புதுடெல்லி, அக். 16– சாட்டிலைட் இன்டர்நெட் சேவைக்கான அலைக்கற்றை ஒதுக்கீடு செய்யும் விவகாரத்தில் ஜியோ மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் ஆகிய நிறுவனங்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது. சாட்டிலைட் அலைக்கற்றை ஒதுக்கீட்டை ஏல நடைமுறையின் கீழ் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்துக்கு ஜியோ கடிதம் எழுதியதாக தகவல் வெளியானது. இந்நிலையில், சர்வதேச டெலிகாம் மற்றும் சாட்டிலைட் நிறுவனங்கள் ஏல நடைமுறையை இதில் பின்பற்றக் கூடாது என மத்திய அரசை வலியுறுத்தி […]

Loading

செய்திகள்

வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டி: காங்கிரஸ் அறிவிப்பு

டெல்லி, அக். 16– வயநாடு நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது. மகாராஷ்டிரா, ஜார்கண்ட் மாநில சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதிகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இது தொடர்பாக வெளியிடப்பட்ட அறிவிப்பில், மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக நவம்பர் 20ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. “ஜார்கண்ட் மாநிலத்தில் மொத்தம் உள்ள 81 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நவம்பர் 13ஆம் தேதி மற்றும் நவம்பர் 20ஆம் தேதி என […]

Loading

செய்திகள்

விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; சத்தீஸ்கரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன்

மும்பை, அக். 16– விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சத்தீஸ்கரை சேர்ந்த தந்தை, மகனுக்கு மும்பை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் கடந்த 14-ந்தேதி மும்பையில் இருந்து புறப்பட்ட 3 சர்வதேச விமானங்களுக்கு மர்ம நபர்கள் ‘எக்ஸ்’ வலைதளம் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்தனர். இதில் நியூயார்க் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம், டெல்லியை நோக்கி திருப்பி விடப்பட்டது. அதேபோல், இண்டிகோ நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு விமானங்கள் நீண்ட நேரம் தாமதத்திற்கு பிறகு புறப்பட்டுச் சென்றன. இந்த வெடிகுண்டு […]

Loading

செய்திகள்

‘புரட்சிச்சுடர்’ வீரபாண்டிய கட்டபொம்மன்: முதலமைச்சர் ஸ்டாலின் புகழஞ்சலி

சென்னை, அக்.16– புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:– ஆங்கிலேய ஆட்சிக்கெதிராகத் தமிழ்நாட்டில் தோன்றிய புரட்சிச் சுடர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு நாள்! அந்நியரின் ஆதிக்கம் பொறுக்காமல், நெஞ்சை நிமிர்த்திப் போரிட்ட அவரது புகழ், தென்னாட்டின் வீரம் செறிந்த வரலாற்றுப் பக்கங்களில் எந்நாளும் ஒளிவீசும்! இவ்வாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

Loading

செய்திகள் நாடும் நடப்பும்

2 மாநில சட்டமன்ற தேர்தல் தரும் பாடம்

தலையங்கம் அண்மையில் வெளிவந்த அரியானா மற்றும் ஜம்மு-காஷ்மீர் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள், இந்தியாவின் அரசியல் களத்தில் ஏற்பட்டு வரும் முக்கிய அரசியல் பரிமாணங்களையும், மாற்றங்களையும் வெளிப்படுத்துகின்றன. பாரதீய ஜனதா கட்சிக்கு (பாஜக) அரியானாவில் வெற்றி மிக முக்கியமானது. தேர்தலுக்கு முன் வெளிவந்த கருத்துக் கணிப்புகளை தாண்டி, மூன்றாவது முறை தொடர்ந்து வெற்றியை பெற்று அம்மாநிலத்தில் ஆட்சியைப் பிடித்துள்ளது. இந்த வெற்றிக்குப் பிரதமர் நரேந்திர மோடியின் மீது மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை அசைக்க முடியாதது என்பது மீண்டும் நிரூபணமாகி […]

Loading

செய்திகள்

தொழில் முனைவோர் – புத்தாக்கம் ஓராண்டு சான்றிதழ் படிப்பு பயிற்சி வகுப்புகள்

இணையம் மூலம் விண்ணப்பிக்கலாம் கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தகவல் சென்னை, அக். 15– சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம் தொடர்பான ஓராண்டு சான்றிதழ் படிப்பிற்கான பயிற்சி வகுப்புகளுக்கு இணையதளத்தின் வாயிலாக விண்ணப்பித்துப் பயன்பெறலாம் என சென்னை மாவட்ட கலெக்டர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:– தமிழ்நாடு மற்றும் அகமதாபாத் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனங்கள் இணைந்து ‘தொழில் முனைவோர் மற்றும் புத்தாக்கம்’ […]

Loading

செய்திகள்

சென்னையில் 15 மண்டலங்களில் கண்காணிப்பு, மண்டல அலுவலர்கள் நியமனம்

மழை பாதிப்பு குறித்து பொதுமக்கள் தொலைபேசி மூலம் புகார் தெரிவிக்கலாம் சென்னை, அக்.15-– வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு சென்னையில் 15 மண்டலங்களிலும் கண்காணிப்பு அலுவலர்கள், மண்டல அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 15 மண்டலங்களிலும் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, முன்னேற்பாடு, நிவாரணம் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொள்ள ஒவ்வொரு மண்டலங்களுக்கும் இந்திய ஆட்சிப் பணி (ஐ.ஏ.எஸ்) நிலையில் மண்டல கண்காணிப்பு அலுவலர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். அதன் விவரம் வருமாறு:- திருவொற்றியூர் -– ஜி.எஸ்.சமீரன் […]

Loading

செய்திகள்

சிகரெட் லைட்டர் உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை: மத்திய அமைச்சருக்கு ஸ்டாலின் நன்றி

சென்னை, அக். 15– சிகரெட் லைட்டர் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது அல்லவா? குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது:– ‘‘எனது கோரிக்கைகளை முழுமையாக ஏற்று, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய – 20 ரூபாய்க்குக் குறைவான பிளாஸ்டிக் சிகரெட் லைட்டர்களுக்குக் கடந்த ஆண்டு தடை விதித்ததைத் தொடர்ந்து, தற்போது சிகரெட் லைட்டர்களின் தயாரிப்புக்கான உதிரிபாகங்களின் இறக்குமதிக்கும் தடை விதித்துள்ளமைக்காக ஒன்றிய அமைச்சர் பியுஷ் கோயலுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். […]

Loading

செய்திகள்

ரெயில் சேவை குறித்த தகவலுக்கு உதவி எண்கள் அறிவிப்பு

சென்னை, அக். 15– சென்னையில் இருந்து புறப்படும் ரயில்கள் குறித்து தகவல்களை தெரிந்து கொள்ள தெற்கு ரயில்வே உதவி எண்களை அறிவித்துள்ளது. சென்னை, செங்கல்பட்டு உள்பட 9 மாவட்டங்களுக்கு நாளை ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கனமழை காரணமாக சென்னையில் இருந்து புறப்படும் ரெயில்களின் சேவையில் இதுவரை எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை. மேலும், ரெயில் சேவை குறித்த தகவல்களை பயணிகள் அறிந்து கொள்ள உதவி எண்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. 044–25330952, 044–25330953 ஆகிய உதவி […]

Loading

செய்திகள்

பாலங்கள் மீது நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களுக்கு அபராதம் இல்லை

தாம்பரம் மாநகர போலீஸ் அறிவிப்பு சென்னை, அக். 15– பாலங்கள் மீது நிறுத்தப்படும் வாகனங்களுக்கு அபராதம் வசூலிக்கபடாது என தாம்பரம் மாநகர காவல்துறை அறிவித்ததை தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பள்ளிக்கரணை பாலத்தின் மீது நிறுத்தி வருகின்றனர். சென்னைவாசிகள், ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவமழையின் போது பெரும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இந்த மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்பட்டு கார்கள், இரு சக்கர வாகனங்கள் அடித்து செல்லப்படுகின்றன. இந்நிலையில் இம்முறை அவ்வாறு ஒரு சூழல் ஏற்படாமல் தடுக்க பல்வேறு […]

Loading