வண்டலூர், ஜன.9-
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு வாரந்தோறும் செவ்வாய்க்கிழமை விடுமுறை தினமாகும். வருகிற பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் 16-ந்தேதி செவ்வாய்க்கிழமை திருவள்ளுவர் தினம் வருவதால் அன்றைய தினம் வண்டலூர்பூங்கா பொதுமக்கள் பார்வைக்காக திறந்திருக்கும். பூங்காவுக்கு வரும் பார்வையாளர்கள் தடை செய்யப்பட்ட பொருட்களான பிளாஸ்டிக், மற்றும் பிளாஸ்டிக் பையில் அடைக்கப்பட்ட உணவு பொருட்கள், பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில்கள், கரும்பு, புகையிலை பொருட்கள், மது பொருட்கள், கத்தி மற்றும் பிற ஆயுதங்கள் கொண்டு வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பூங்காவில் பல்வேறு முன்னேற்பாடுகள் சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை வண்டலூர் பூங்கா நிர்வாகம் தெரிவித்துள்ளது.