செய்திகள்

2 ஜி மேல்முறையீடு: அமலாக்கத்துறை, சிபிஐ பதிலளிக்க டெல்லி கோர்ட் உத்தரவு


31 ந்தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு


டெல்லி, அக். 20–

சிபிஐ, அமலாக்கத்துறை, எதிர்மனுதாரர்கள் 30 ஆம் தேதிக்குள் 2 ஜி வழக்கில் எழுத்து பூர்வ வாதங்களைத் தாக்கல் செய்ய டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ‘2ஜி’ அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாகத் தொடுத்த வழக்குகளில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் ஒன்றிய தொலைத்தொடர்பு அமைச்சர் ஆ.ராசா, தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி உள்பட 14 பேரையும் விடுவித்து சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றம் கடந்த 2017-ம் ஆண்டு டிசம்பர் இறுதியில் தீர்ப்புக் கூறியது.

30 ந்தேதிக்குள் பதில் வாதம்

சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை இந்த தீர்ப்புக்கு எதிராகத் தாக்கல் செய்த மேல்முறையீடு அனுமதி மனுக்களை, டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி தினேஷ் குமார் சர்மா விசாரித்து வருகிறார். நேற்றைய விசாரணையில், சி.பி.ஐ. தரப்பில் ஆஜரான அரசு தரப்பு சிறப்பு வழக்கறிஞர் சஞ்சய் ஜெயின் மேல்முறையீடு மனுவை ஏற்க வேண்டியதன் அவசியத்தைக் குறிப்பிட்டு வாதங்களை முன்வைத்தார்.

இந்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி தினேஷ் குமார் சர்மா, மேல்முறையீடு அனுமதி மனுக்கள் தொடர்பாக சி.பி.ஐ., அமலாக்கத் துறை, எதிர் மனுதாரர்கள் சார்பில் எழுத்துப்பூர்வமான வாதங்களை 10 பக்கங்களுக்கு மிகாமல் அக்டோபர் 30-ந்தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் விசாரணை அக்டோபர் 31-தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது எனவும் உத்தரவிட்டார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *