செய்திகள்

மேலை நாடுகளின் போர் அணுகுமுறையில் அதிருப்தி

ஐ.நா. மனித உரிமை இயக்குநர் கிரேக் மொகிபர் ராஜிநாமா

நியூயார்க், நவ. 01–

இஸ்ரேல் போரில் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறையில் அதிருப்தி அடைந்த ஐ.நா. மனித உரிமை அமைப்பின் இயக்குநர் கிரேக் மொகிபர் தனது பதவியை ராஜிநாமா செய்துள்ளார்.

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே கடந்த 24 நாள்களாக கடுமையான போர் நடைபெற்று வருகின்றது. பாலஸ்தீன நாட்டிற்குள் நுழைந்து ஹமாஸை அடியோடு அழிக்க இஸ்ரேல் சூளுரைத்துள்ளது. அதற்காக, சா மீது தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தி வரும் இஸ்ரேல், தரை வழித் தாக்குதலையும் தொடங்கியுள்ளது. இந்தப் போரில் இதுவரை 8,500-க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.

மேலை நாடுகள் மீது அதிருப்தி

இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் இயக்குநர் கிரேக், தனது ராஜிநாமா கடிதத்தை உயர் ஆணையரிடம் வழங்கியுள்ளார். அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில், காசாவை முற்றுகையிட்டு தாக்குதல் நடத்தும் விவகாரத்தில் ஐ.நா. அவை மற்றும் மேற்கத்திய நாடுகளின் அணுகுமுறை குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *