செய்திகள்

இந்தியாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு

டெல்லி, நவ. 01–

இந்தியாவில் புதிதாக 38 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 252 ஆக உள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 22 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,50,01,328 ஆக உயர்ந்துள்ளது.

ஒருவர் உயிரிழப்பு

இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 252 ஆக உள்ளது. தமிழ்நாட்டில் புதிதாக யாருக்கும் கொரோனா கண்டறியப்படாத நிலையில், 13 பேர் சிகிச்சையில் உள்ளனர். இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஒருவர் உயிரிழந்த நிலையில், இந்தியாவில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 5,33,294 ஆக உயர்ந்துள்ளது.

நேற்று மட்டும் 32 பேர் வீடுதிரும்பிய நிலையில், இதுவரை மொத்தம் 4,44,67,783 பேர் நோய்த் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். குணமடைந்தோர் விகிதம் 98.81 சதவீதமாக உள்ளது. நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை 220.68 கோடி டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன என்று இந்திய குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *