மேட்டூர், நவ. 01–
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்வதால், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 52.43 அடியாக உயர்ந்துள்ளது.
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்தும் வினாடிக்கு 2794 கனஅடியிலிருந்து வினாடிக்கு 2968 கன அடியாக அதிகரித்துள்ளது.
நீர்மட்டம் 52.43 கன அடி
அணைக்கான நீர்வரத்து 2968 கன அடியாக அதிகரித்துள்ள நிலையில், மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 52.43 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 500 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 19.37 டிஎம்சியாக உள்ளது.