நல்வாழ்வு சிந்தனை
மழைக்காலங்களில் அடிக்கடி ஜலதோஷம் வரும் என்பதும் ஜலதோஷம் வந்தால் மூன்று நாட்களுக்கு பெரும் தொல்லையாக இருக்கும் என்பதும் தெரிந்ததே . இந்த நிலையில் ஜலதோஷம் வந்தால் சில மருந்துகளை சாப்பிட்டால் உடனடியாக சரியாகி விடும். குறிப்பாக நிலவேம்பு குடிநீர் சாப்பிட்டால் ஜலதோஷம் வரும் நேரத்தில் வைரஸ் காய்ச்சல் வருவது தடுக்கப்படும். அதேபோல் தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டால் ஜலதோஷம் வருவதை முன்கூட்டியே தடுக்கலாம் தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும் என்றும் தினமும் பாலில் மிளகு மஞ்சள் பனங்கல்கண்டு சேர்த்து காய்ச்சி குடித்தால் ஜலதோஷம் வராது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.