செய்திகள்

பாரதீய ஜனதாவுடன் சமத்துவ மக்கள் கட்சியை இணைத்தார் சரத்குமார்

சென்னை, மார்ச் 12–

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அதன் நிறுவனர் சரத்குமார் இன்று பாஜகவில் இணைத்தார்.

வரும் நாடாளுமன்றத்தில் பாரதீய ஜனதாவுடன் சமத்துவ மக்கள் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளதாகவும், தொகுதி் பங்கீடு பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் சரத்குமார் தெரிவித்து வந்த நிலையில், இந்த இணைப்பு நிகழ்ச்சி அரங்கேறியுள்ளது.

சென்னை தி.நகரில் உள்ள சமத்துவ மக்கள் கட்சி தலைமை அலுவலகத்திற்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை இன்று வந்தார். அங்கு சரத்குமாருடன் அண்ணாமலை ஆலோசனை நடத்தினார். அதன் பின்னர், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் தனது கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து சரத்குமார் தனது அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை பாரதீய ஜனதாவுடன் இணைத்துக்கொண்டார்.

இணைப்புக்குப் பின்னர் பேசிய சரத்குமார், “பாஜகவில் இணைந்தது சமத்துவ மக்கள் கட்சியின் முடிவு அல்ல. மாறாக மக்கள் பணிக்கான தொடக்கம். நாங்கள் மக்கள் பணியில் தொடர்கிறோம். இது நாளைய எழுச்சிக்காக எடுக்கப்பட்ட முடிவு, நாட்டின் வளர்ச்சிக்காகவும், வருங்கால இளைஞர்களின் நலனுக்காகவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்தே முடிவு எடுக்கப்பட்டுள்ளது” என்றார். மேலும் பிரதமர் மோடி காமராஜரைப் போல ஆட்சி செலுத்துவதாக புகழாரம் சூட்டினார்.

முன்னதாகப் பேசிய அண்ணாமலை, “சரத்குமார் தேசியத்துக்கு தேவைப்படுகிறார். அவரை சிறிய வட்டத்துக்குள் அடைத்துவைக்கக் கூடாது” என்று கூறி இணைப்பை வரவேற்றார்.

இந்த இணைப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *