செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்வு

சென்னை, அக். 18–

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தின் விலை அண்மை காலமாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த மாதத்தில் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் குறைந்த அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.5,560-க்கும், சவரன் ரூ.44,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ. 1 உயர்ந்து கு.78-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதன்படி, கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.78,000 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *