சென்னை, அக். 28–
சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.520 உயர்ந்து, சவரன் ரூ.46,120 க்கு விற்பனை ஆவதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது. அண்மையில் பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் போர் தொடுத்துள்ள நிலையில், தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சவரனுக்கு ரூ.520 உயர்வு
அதன்படி, சென்னையில் நேற்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.45,640 ஆகவும், கிராமுக்கு ரூ.5,705 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனையான நிலையில், இன்று ஆபரணத் தங்கம் சவரனுக்கு 520 ரூபாய் உயர்ந்து, ரூ.46,160-க்கும், ஒரு கிராம் 65 ரூபாய் உயர்ந்து ரூ.5,770-க்கும் விற்பனையாகிறது.
அதேபோல் வெள்ளி நேற்று ஒரு கிராம் ரூ.77.50-க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று எவ்வித மாற்றமும் இன்றி அதே விலைக்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.77,500 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.