சென்னை, டிச.8–
சேலத்தில் நடைபெறவிருந்த தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாடு டிசம்பர் 24–ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிக்ஜாம் புயல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகள் நடைபெற்று வருவதால், மாநாடு தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என தி.மு.க. தலைமை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிட்ட அறிக்கையில்,
கடந்த 2007ம் ஆண்டு டிசம்பர் 15 அன்று கழக வரலாற்றில் முத்திரைப் பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினை தொடர்ந்து, வருகிற 17–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று தி.மு.க. இளைஞர் அணி 2வது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறவிருந்த நிலையில், மழை காரணமாக ஒரு வாரக் காலத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
தி.மு.க. இளைஞரணி 2வது மாநில மாநாடு 24ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது
தி.மு.க. இளைஞரணி மாநாட்டில் சுமார் 10 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.