திருத்தணி, அக். 20–
கே.ஜி.கண்டிகை நகரில் உள்ள கற்பக விநாயகர் திருக்கோயில் உண்டியலை உடைத்து, ரூ.15,000 கொள்ளையடிக்கப்பட்டுள்ளது அறிந்து பக்தர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியை அடுத்த கே.ஜி.கண்டிகை நகரில் சுமார் 40 ஆண்டுகள் பழைமை வாய்ந்த சிறீகற்பக விநாயகர் திருக்கோயில் அமைந்துள்ளது.
இந்நிலையில் நேற்று நள்ளிரவு யாரும் இல்லாத நேரம் பார்த்து புகுந்த மர்ம நபர்கள், கோயில் முன் பீடத்தில் இருந்த உண்டியலை உடைத்து 15,000 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
கொள்ளையர்களுக்கு வலை
இன்று காலையில் கோயிலுக்கு சாமி கும்பிட வந்திருந்த பக்தர்கள் இதனை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கோயில் நிர்வாகி கார்த்தி என்பவர் புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மேலும் மாநில நெடுஞ்சாலையிலுள்ள சிசிடிவி கேமராக்களின் உதவியுடன் கொள்ளையர்களை கண்டறியும் முயற்சியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர்.