ஒட்டாவா, அக்.25–
கனடாவின் வடக்கே ஒன்டாரியோ நகரில் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் 2 குழந்தைகள் உள்பட 5 பேர் பலியானார்கள்.
இது குறித்து சால்ட் மேரி போலீசார் கூறுகையில், 5 பேரும் அதே பகுதியில் உள்ள வெவ்வேறு வீடுகளில் உயிரிழந்தவர்கள் ஆவார்கள். முதலில் வந்த தொலைபேசி அழைப்பின்படி போலீசார் சென்று விசாரணை நடத்தியதில், தான்கிரெட் தெருவில் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
தொடர்ந்து 10 நிமிடங்களில் மற்றொரு தொலைபேசி அழைப்பு வந்தது. இதன்படி சென்று பார்த்தபோது, துப்பாக்கி சூடு காயங்களுடன் 45 வயது மதிக்கத்தக்க நபர் உயிரிழந்து கிடந்தார். அவருடன் 6 மற்றும் 12 வயதுடைய 2 பேரின் உடல்களும் காணப்பட்டன. அவர்களும் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்து இருந்தனர்.
அதனைத் தொடர்ந்து 44 வயதான மற்றொரு நபர் துப்பாக்கியால் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதும் தெரிய வந்தது என்று தெரிவித்தனர்.
போலீஸ் விசாரணையில் இவை ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதாக உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்தனர்.