செய்திகள்

தங்கம் விலை அதிரடி உயர்வு: ஒரு கிராம் ரூ.6 ஆயிரத்தை தொட்டது

சவரன் ரூ.48 ஆயிரத்தை தாண்டியது

சென்னை, மார்ச் 5–

தங்கத்தின் விலை இன்று ஒரேநாளில் அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.48 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆகிறது. வரலாறு காணாத அளவு விலை உயர்வால் சாமானிய மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தங்கத்தின் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்ற இறக்கத்தோடு காணப்படுகிறது. நேற்று மட்டும் சவரனுக்கு ரூ.80 அதிகரித்து ரூ.47,440-க்கு விற்பனை ஆனது.

இந்நிலையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 என்று அதிரடியாக உயர்ந்து வரலாற்றிலேயே முதல்முறையாக ரூ.48 ஆயிரத்தை தாண்டியது. ஒரு சவரன் ரூ.48,120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல் கிராமுக்கு 85 ரூபாய் உயர்ந்து 6 ஆயிரத்து 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. கடந்த 20 நாட்களில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ரூ.2,200 வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. வரும் மாதங்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.50,000-ஐ கடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.

வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 1 ரூபாய் 20 காசு அதிகரித்து 78 ரூபாய் 20 காசுகளாக விற்பனை செய்யப்படுகிறது. அதேநேரம் 1 கிலோ பார் வெள்ளி ரூ.78,200க்கு விற்பனையாகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *