ஐதராபாத், ஜன. 25–
ஐதரபாத்தில் நடைபெற்று வரும் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்து வருகிறது
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி இந்திய அணியுடன் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடுகிறது. இந்த நிலையில், இரு அணிகளும் மோதும் முதல் டெஸ்ட் போட்டி இன்று ஹைதரபாத் ராஜீவ்காந்தி மைதானத்தில் தொடங்கியுள்ளது.இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் முதலில் பேட் செய்வதாக அறிவித்துள்ளார். இதையடுத்து, இங்கிலாந்து அணியின் ஜாக் கிராவ்லி – பென் டக்கெட் ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். கேப்டன் ரோகித்சர்மா தலைமையிலான இந்திய அணியில் சுழலுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
இன்றைய டெஸ்ட் போட்டியில் வேகப்பந்து வீச்சாளர்களாக பும்ரா, சிராஜ் ஆகியோர் மட்டுமே களமிறங்கியுள்ளனர். இந்திய அணி மூன்று சுழற்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்கியுள்ளது. அஸ்வின், ஜடேஜா மற்றும் அக்ஷர் படேல் இன்றைய போட்டியில் களமிறங்கியுள்ளனர். இதனால், இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக சுழல் தாக்குதல் நடத்த திட்டமிட்டுள்ளது.
இந்திய அணியின் விவரம்: கேப்டன் ரோகித்சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன்கில், கே.எல்.ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், ஜடேஜா, ஸ்ரீகர் பரத் ( விக்கெட் கீப்பர்), அஸ்வின், அக்ஷர் படேல், பும்ரா, சிராஜ்.
இங்கிலாந்து அணி: ஜாக் கிராவ்லி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட், ஜானி பார்ஸ்டோ, பென் ஸ்டோக்ஸ், பென் போக்ஸ், ரெஹன் அகமது, டாம் ஹார்ட்லி, மார்க் வுட், ஜேக் லீச்