வாழ்வியல்

வெங்காயத்தின் சாற்றையும் வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்தால் பல்வலி, ஈறுவலி குறையும்


நல்வாழ்வுச் சிந்தனைகள்


வெங்காயத்தின் சாற்றையும் இளஞ்சூடுள்ள வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்தால் பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயம் பயன்கள் வருமாறு:–

வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும். சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட, காதுவலி குறையும்.

வெங்காயத்தை நறுக்கி, சிறிது இலவம் பிசினைத் தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும். சின்ன வெங்காயம் பயன்கள் – வெங்காயத்தின் நெடி சில தலைவலிகளை குறைக்கும், வெங்காயத்தை வதக்கி சாப்பிட்டால் உடல் உஷ்ணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பும் நீங்கும்.

வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.வெங்காயத்தின் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும். வெங்காயத்தின் சாற்றையும், வெந்நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும். வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும். வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *