சென்னை, டிச. 17–
தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் அரையாண்டு தேர்வு விடுமுறையை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் ழுழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வரும் 24-–ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.
அதன்படி வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் இருந்து ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.