செய்திகள்

பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் அரையாண்டு விடுமுறை

சென்னை, டிச. 17–

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு ஒரு வாரம் அரையாண்டு தேர்வு விடுமுறையை அளித்து பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகம் ழுழுவதும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த தேர்வுகள் வரும் 24-–ந்தேதியுடன் முடிவடைகிறது. இந்த நிலையில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை குறித்து அறிவிப்பை பள்ளி கல்வித்துறை இன்று வெளியிட்டுள்ளது.

அதன்படி வரும் 25-ம் தேதி கிறிஸ்துமஸ் நாளில் இருந்து ஜனவரி 1-ம் தேதி வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 2-ம் தேதி பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்று பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *