ஓரிரு வாரங்களில் பதிளிக்க முடிவு
டெல்லி, ஜன. 19–
‘நீட்’ விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு இந்திய சுகாதார அமைச்சகம் மீண்டும் கடிதம் அனுப்பியுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்தாண்டு ‘நீட்’ விலக்கு மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி இந்திய அரசுக்கு அனுப்பினார். ‘நீட்’ விலக்கு மசோதா குறித்து கடந்த ஆண்டே இந்திய சுகாதார அமைச்சகம் தமிழ்நாடு அரசிடம் விளக்கம் கேட்டிருந்த நிலையில், தமிழ்நாடு மருத்துவத்துறையும் இந்திய ஒன்றிய அமைச்சகத்திற்கு பதில் அளித்திருந்தது.
ஓரிரு வாரங்களில் பதில்
இந்நிலையில், ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் தமிழ்நாடு மருத்துவத்துறைக்கு ‘நீட்’ விலக்கு மசோதா குறித்து இந்திய அரசு மீண்டும் விளக்கம் கேட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, சட்டவல்லுநர்களுடன் கலந்து ஆலோசித்து ஓரிரு வாரங்களில் தமிழ்நாடு அரசுத் தரப்பில் மீண்டும் விளக்கம் அளிக்கப்படும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.