சென்னை, மார்ச் 6–
தமிழ்நாட்டில் 8,9,10 ஆகிய 3 நாள்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்ச் 6, 7 ந் தேதிகளில் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மார்ச் 8, 9, 10 ஆகிய தேதிகளில் தென் தமிழ்நாட்டின் மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியசை ஒட்டி இருக்கக்கூடும் கடந்த 24 மணி நேரத்தில் கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல் மாவட்டம்) 2 செ.மீ, கொடைக்கானல் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.