செய்திகள்

தமிழகத்தில் 30க்கு கீழ் வந்த கொரோனா பாதிப்பு

சென்னை, நவ.26-

தமிழகத்தில் நேற்று புதிதாக 15 ஆண்கள், 14 பெண்கள் உள்பட மொத்தம் 29 பேருக்கு புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டு உள்ளது. சென்னையில் 5 பேர் உள்பட மொத்தம் 11 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகி உள்ளது. நாமக்கல், நீலகிரி, தென்காசி உள்ளிட்ட 27 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை.

மேலும், 12 வயதுக்கு உட்பட்ட 10 குழந்தைகளுக்கும், 60 வயதுக்கு மேற்பட்ட 5 முதியவர்களுக்கும் நேற்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. ஆஸ்பத்திரியில் 155 பேர் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

தமிழகத்தில் நேற்று கொரோனா தொற்றால் எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை. தற்போது 320 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *