சென்னை, ஜன.4-–
தமிழகத்தில் நேற்று புதிதாக 2 ஆண்கள், 8 பெண்கள் உள்பட மொத்தம் 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னை, கோவை, மதுரை உள்பட 7 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு பதிவாகியுள்ளது. 31 மாவட்டங்களில் பாதிப்பு இல்லை. தமிழகத்தில் கொரோனா தொற்றால் நேற்று எந்த மாவட்டத்திலும் உயிரிழப்பு ஏற்படவில்லை.