செய்திகள்

இந்தியாவில் புதிதாக 283 பேருக்கு கொரோனா

டெல்லி, மார்ச் 3–

இந்தியாவில் புதிதாக 283 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 283 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 2525 ஆக பதிவாகியுள்ளது.

இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,772 ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,53,865ஆக பதிவாகியுள்ளது.

நாடு முழுவதும் இதுவரை 220 கோடியே 64 லட்சத்து 08,507 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 6,747டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *