புதுடெல்லி, ஏப்.26–
இந்தியாவில் இன்று 2 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இ
இந்தியாவில் தினசரி கொரோனா பாதிப்பு தொடர்பான விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது.
அதன்படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 2 ஆயிரத்து 483 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது நேற்றைய பாதிப்பான 2 ஆயிரத்து 541ஐ விட சற்று குறைவாகும்.
நாட்டில் கொரோனா பாதிக்கபட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 30 லட்சத்து 62 ஆயிரத்து 569 ஆக அதிகரித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 1 ஆயிரத்து 970 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை கொரோனாவில் இருந்து 4 கோடியே 25 லட்சத்து 23 ஆயிரத்து 311 பேர் குணமடைந்துள்ளனர்.
நாடு முழுவதும் வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 15 ஆயிரத்து 636 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனாவுக்கு கடந்த 24 மணி நேரத்தில் 1 ஆயிரத்து 347 பேர் உயிரிழந்துள்ளனர். கேரளா (47) மற்றும் அசாமில் (1,347) ஏற்கனவே உயிரிழந்து மாநில பட்டியலில் சேர்க்கப்படாத எண்ணிக்கை மறுகணக்கீட்டின்படி சேர்க்கப்பட்டதால் இன்று அதிக அளவிலான உயிரிழப்பு பதிவாகி உள்ளது.
இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 23 ஆயிரத்து 622 ஆக அதிகரித்துள்ளது.
நாடு முழுவதும் இதுவரை 187 கோடியே 95 லட்சத்து 76 ஆயிரத்து 423 தடுப்பூசி டோஸ்கள் மக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 99 லட்சத்து 27 ஆயிரத்து 303 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 6 லட்சத்து 53 ஆயிரத்து 969 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 46 கோடியே 30 லட்சத்து 28 ஆயிரத்து 264 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 62 லட்சத்து 45 ஆயிரத்து 70 பேர் உயிரிழந்துள்ளனர்.