டெல்லி, பிப். 18–
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 156 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இதுகுறித்து இந்திய மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் நாட்டில் 156 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 1867 ஆக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 5,30,757 பேர் ஆக உள்ளது. இதுவரை குணமடைந்து வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 4,41,52,151 ஆக பதிவாகியுள்ளது. நாடு முழுவதும் இதுவரை 220,63,35,191 டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. நேற்று ஒரே நாளில் 8,281 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று இந்திய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.