விழுப்புரம், பிப். 25–
விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலையில் நடைபெறும் அண்ணா தி.மு.க. மாநில மாநட்டிற்கான கால் கோல் விழா இன்று நடைபெற்றது. இதில் அண்ணா தி.மு.க. நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.பி.க்கள்., எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.
100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது.
அண்ணா தி.மு.க. சார்பாக கட்சியின் மாநில மாநாடு அடுத்த மாதம் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் கழக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். 100ஏக்கர் பரப்பளவில் அமைய உள்ள மாநாட்டிற்கான ஏற்பாட்டு பணிகள் இன்று கால் கோல் விழாவுடன் தொடங்கியது.
இவ்விழாவில் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், பி. தங்கமணி, சி.வி. சண்முகம், கே.பி. அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன், ஓ எஸ் மணியன் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி முனுசாமி எம்.பி. உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி பந்தக்கால் நடவு செய்து மாநாட்டுக்கான பணிகளை தொடங்கி வைத்தனர்.
இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் மோகன், சட்டமன்ற உறுப்பினர்கள் குமரகுரு, சக்கரபாணி, முத்தமிழ்ச் செல்வன், பிரபு மற்றும் மாவட்ட ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
அண்ணா தி.மு.க. மாநில மாநாடு 10 ஆண்டுகளுக்குப் பிறகு நடத்தப்படுகிறது. ஒரு லட்சத்து50 ஆயிரம் தொண்டர்கள், நிர்வாகிகள் கல்ந்துக்கள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட உள்ளன . மறைந்த முதல்வர் ஜெயலலிதா அவர்கள் விவசாயிகளுக்காக திருச்சியில் மாபெரும் மாநாட்டை நடத்தி இந்தியாவை திரும்பி பார்க்க வைத்தார் : அதே போன்ற மாபெரும் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் என்று நிர்வாகிகள் தெரிவித்தனர்.