சிறுகதை

ஆறுதலான – மு.வெ.சம்பத்

சந்திரன் பத்து நாட்கள் விடுமுறையில் சென்னை வந்திருந்தார். சில முக்கிய நிகழ்ச்சிகளில் பங்கேற்று விட்டு செல்லலாம் என்ற எண்ணத்தில் வந்தவர் கணக்குப் போட்டு செலவழிப்பவராதலால் ஒவ்வொரு இடம் செல்லும் போதும் எவ்வளவு செலவாகும் என கணக்கிட்டு மேற்கொண்டு அதிகப்படியாக பணம் கொண்டு செல்ல மாட்டார். அவர் செல்லும் சொந்தக்காரர் வீடுகளில் எல்லாம் கணக்குச் சந்திரன் மாமா என்றே கேலி செய்வார்கள். அவர் அதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ள மாட்டார். பயணம் செல்வதற்கு முன் எப்படி செல்லப் போகிறோம். […]

Loading

சிறுகதை

பால்கனி – ராஜா செல்லமுத்து

விரிந்து பரந்து கிடக்கும் அந்த அடுக்குமாடிக் குடியிருப்புகளில் எல்லா குடியிருப்புகளிலும் பால்கனி இருக்கும். சிலர் அந்தப் பால்கனியில் உபயோகமற்ற பொருட்களை அடைத்து வைத்திருப்பார்கள். சிலர் கொடிகளைக் கட்டி துணிகளை அதில் காய வைத்து இருப்பார்கள். சிலருக்கு வெளிச்சம் வரும் வழி. சிலருக்கு பூந்தொட்டிகள் வைக்கும் இடம். சிலருக்கு செருப்புகள் வைக்கும் இடம் என்று பால் கனியைப் பலவிதமாக பயன்படுத்தினார்கள். ஆனால், ஜானகி மட்டும் பால்கனியை தன் பொழுதுபோக்கு இடமாக வைத்திருந்தாள்.சில நேரங்களில் அங்கு அமர்ந்து புத்தகங்களை வாசிப்பாள். […]

Loading

சிறுகதை

தாத்தாவின் பாசம் – எம்.பாலகிருஷ்ணன்

… ஏங்க பக்கத்து வீட்டுக் குழந்தையை எந்த நேரமும் கொஞ்சிறீங்களே அந்தக் குழந்தை உங்கள தாத்தா தாத்தான்னு சொல்லுது. நீங்களும் சொந்தப் பேரனை கொஞ்சுறமாதிரி கொஞ்சுறீங்க. ஏண்டி குழந்தை தாத்தான்னு பாசத்தோடுவருது. அதை போயிகொஞ்ச வேணாமுன்னு சொல்லுற உங்கள தாத்தான்னு சொல்லுறதுக்கு நம்ம சொந்த பேரனே இருக்கானில்ல. அப்புறம் ஏன் அடுத்தவீட்டுக் குழந்தையை கொஞ்சுறீங்க. நம்ம பேரன் தான் ஊர்ல இருக்கானில்ல; அவன் வர்றவரைக்கும் இவனை கொஞ்சுனா என்னதப்பு. ஏங்க நீங்க யோசிச்சித் தான் பேசுறீங்களா? நம்ம […]

Loading

சிறுகதை

பஞ்சு மிட்டாய் – ராஜா செல்லமுத்து

அம்மா எனக்கு பஞ்சு மிட்டாய்? என்று பள்ளிக்கு செல்லும் குழந்தை கிரி வீதியில் விற்றுக்கொண்டு போகும் பஞ்சு மிட்டாயைக் கேட்ட போது அதெல்லாம் ஒன்னும் வேண்டாம் யூனிஃபார்ம் எல்லாம் அழுக்காயிரும் . ஸ்கூல் முடிச்சு சாயங்காலம் வந்து சாப்பிட்டுக்கலாம் என்று அம்மா புவனேசுவரி சொல்லியும் கேட்காத கிரி அடம்பிடித்து வண்ண வண்ணமாய் பிளாஸ்டிக் பைகளில் அடைக்கப்பட்டிருந்த பஞ்சுமிட்டாயை வாங்கித் தின்றான். பார்த்து யூனிஃபார்ம்ல பண்றாங்க மெதுவா சாப்பிடு என்று புவனேசுவரி சொல்வதைக் கூட காதில் கேட்காத அந்தக் […]

Loading

சிறுகதை

மூன்று – ஆவடி ரமேஷ்குமார்

எனக்கு போன் செய்த அனுஷா, ” மாதவன், நாளைக்கு ரிஜிஸ்தர் ஆபீஸ்ல நடக்க இருக்கிற நம்ம கல்யாணம் கேன்சல்.எங்கப்பா ஹார்ட் அட்டாக்ல இறந்திட்டார்” என்றாள். ” ஓ மை காட்!”அனுஷா எனக்காக வாங்கிக்கொடுத்த காரில் அவள் வீட்டுக்கு புறப்பட்டேன். அனுஷா….கோடீஸ்வரி! இரண்டு திருமணங்கள் செய்து தோல்வியடைந்தவள்.நான் அவளின் தந்தை தொழிதிபர் சிவாச்சலத்தின் புதிய மேனேஜர்.வயது 40.ஒரு நாள்,” நீங்க ஏன் மாதவன் கல்யாணமே பண்ணிக்கலை”என்று கேட்டாள். ” என் முதல் காதல் தோல்வி.அதான் பண்ணிக்கலை” என்றேன்.” என் […]

Loading

சிறுகதை

மகளிர் பயணச் சீட்டு – ராஜா செல்லமுத்து

… போரூரில் இருந்து வடபழனி வரைசெல்லும் வழித்தடத்தில், வடபழனியில் வேலை பார்க்கும் இளங்கோவன் எத்தனையோ பேருந்துகள் வந்தாலும் மகளிர் இலவசமாக இருக்கும் பேருந்தில் தான் ஏறுவார் இளங்கோ. தனக்கு ஒரு சீட்டும் மகளிர் பயண சீட்டு வாங்கிக்கொள்வார். இதனால் தினமும் மகளிருக்கு இலவசப் பேருந்து பயண சீட்டு கிடைத்துவிடும். தான் ஒருவனுக்கு மட்டும் பயணச் சீட்டு எடுத்தால் போதும் என்று நினைக்கும் இளங்கோ காத்திருந்து கூட இலவசப் பேருந்தில் பயணம் செய்வதுதான் அவருக்கு பிடித்தமான ஒன்றாக இருந்தது. […]

Loading

சிறுகதை

வித்தை – ராஜா செல்லமுத்து

… தாம்பரத்திலிருந்து கோடம்பாக்கத்திற்கு மின்சார ரயிலில் பயணம் செய்து காெண்டிருந்தான் ஆனந்த். அந்த ரயிலில் விதவிதமான மனிதர்களைப் பார்த்தான். எத்தனையோ மனிதர்கள் . தங்கள் வாழ்க்கைக்கான வியாபாரங்களை செய்து கொண்டிருந்தார்கள். பார்வை இழந்தவர்கள் யாசகம் கேட்பதற்கு பதிலாக ஏதோ ஒன்றை விற்று தங்கள் பிழைப்பைக் கவனித்துக் கொண்டார்கள் . கல்லூரி மாணவர்கள், ஏழை பணக்காரன் என்று அத்தனை மனிதர்களையும் உள்ளடக்கி ஓடிக்கொண்டிருந்தது அந்த மின்சார ரயில். தாம்பரத்தில் புறப்பட்ட அந்த ரயில் ஒவ்வொரு நிறுத்தங்களாக நின்று மனிதர்களை […]

Loading

சிறுகதை

கட்டளைகள்- ராஜா செல்லமுத்து

… நெருங்கி வரும் தேர்தல் களத்தில் அத்தனை கட்சிக்காரர்களும் வரிந்து கட்டிக்கொண்டு மக்களிடம் வாக்கு சேகரித்துக் கொண்டிருந்தார்கள். தங்கள் சாதனைகளையும் ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் பிரச்சனைகளையும் சொல்லி தெருத்தெருவாகச் சுற்றிக் கொண்டிருந்தார்கள் வேட்பாளர்கள். ஒரு தெருவில் சென்று வாக்கு சேகரித்துக் கொண்டிருக்கும் போது சாமிநாதன் அந்த வேட்பாளரை இடைமறித்தார். ஐயா உங்க பேர் என்ன? என்று சாமிநாதன் கேட்க, ‘என் பேரு கஜன்’ என்றான் வேட்பாளர். நல்ல பேரா இருக்கு. நீங்க எதுக்காக தேர்தலில் நிக்கிறீங்க? என்று […]

Loading

சிறுகதை

கதை நாயகன் – ராஜா செல்லமுத்து

முத்துராமலிங்கம் திரைத்துறையில் இயக்குநராக வேண்டும் என்பதற்காக கடுமையான முயற்சி செய்து கொண்டிருப்பவன். திறமைக்கும் அறிவுக்கும் வெற்றிக்கும் சம்பந்தம் இல்லை. திறமை இருப்பவன் எல்லாம் வெற்றி பெறுவதில்லை. வெற்றி பெற்றவன் எல்லாம் திறமையாளன் இல்லை. ஏதோ சந்தடி சாக்கில் ஜெயித்து விட்டு போகிறார்கள் திரைத் துறையில். முத்துராமலிங்கம் எழுத்தாளர் எதை எழுதினாலும் நெத்தியடியாக எழுதும் எழுத்தாளர். ஆனால் அவன் எழுத்துக்கும் அவன் வாழ்க்கைக்கு ஒற்றுமை இருந்தது எழுத்து வளமாக இருந்தது. வாழ்க்கை நலமாக இருந்தது. வளம் வர வேண்டும் […]

Loading

சிறுகதை

அன்பும் பாசமும் – ஆர்.வசந்தா

அன்பும் பாசமும் யாவருக்கும் பொதுவானதே. அந்த ஊர் இந்தியாவின் கடைசி எல்லை ஊர். ஒரு தெரு, இந்தியாவின் கடைக்கோடி. அடுத்த தெரு பாகிஸ்தானின் முதல் தெரு. இரு நாட்டிற்கும் பொதுவாக ஒரு பூங்கா இருக்கும். இரு நாட்டு மக்கள் ஜாதி, மதம் கடந்து ஒற்றுமையாகவே வாழ்ந்து வந்தனர். குழந்தைகள் அந்தப் பூங்காவில் மகிழ்ச்சிகரமாக ஓடி ஆடி விளையாடினார்கள். இரு எதிர்வீட்டு நண்பர்களும் ஒரு நாள் சந்தித்துக் கொண்டனர். இந்தியன் ராம்குமாரும் பாகிஸ்தான் ரஹ்மானும் ஒன்றாக உட்கார்ந்து பேசி […]

Loading