செய்முறை தேர்வுகளை காட்டி மிரட்டல்
சண்டிகர், நவ. 5–
பிளஸ் டூ மாணவிகள் 60 பேரை மிரட்டி, பாலியல் அத்துமீறல் செய்த அரியானா பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அரியானா மாநிலம், ஜிந்த் மாவட்டத்தில் உள்ள பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் பிளஸ் டூ மாணவிகளிடம் செய்முறைத் தேர்வுகளில் தோல்வியடைய வைத்து விடுவேன் என மிரட்டி, பள்ளி முதல்வர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
பள்ளி முதல்வர் கைது
இது தொடர்பாக, 15 மாணவிகள் குடியரசுத் தலைவர், பிரதமர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோருக்கு 5 பக்க கடிதம் அனுப்பியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அக்டோபர் 31-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் ஐபிசி 354-வது பிரிவின் கீழ் உச்சனா போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட 60 வயது பள்ளி முதல்வர் கடந்த 5 நாட்களாக தலைமறைவாக இருந்ததுள்ளார். அவரை, தற்போது டிஎஸ்பி அமித் பாட்டியா தலைமையிலான குழுவினர் கைது செய்துள்ளனர். இதனையடுத்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.