செய்திகள்

5 மாநில தேர்தல் நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல

மல்லிகார்ஜுன கார்கே பேட்டி

கலபுர்கி, அக்.25–

அடுத்த மாதம் நடைபெற உள்ள 5 மாநில தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டம் அல்ல என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

கர்னாடக மாநிலம் கலபுர்கியில் செய்தியாளர்களை சந்தித்த மல்லிகார்ஜுன கார்கே தெரிவிக்கையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் சிறப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 5 மாநிலங்களிலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. பாஜக ஆட்சிக்கு எதிராக மக்கள் மிகுந்த அதிருப்தியில் இருக்கிறார்கள். பணவீக்கம் மற்றும் வேலைவாய்ப்பின்மை மக்களை எரிச்சலடைய வைத்துள்ளது. அளித்த வாக்குறுதி எதையும் பாஜக நிறைவேற்றவில்லை.

ராஜஸ்தான் முதல்வர் அசோ் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பெகல் ஆகியோர் தங்கள் மாநிலங்களில் சிறப்பாக செயல்பட்டிருக்கிறார்கள். அந்த மாநிலங்களில் பிரச்சினைகள் ஏதும் இல்லை. மத்தியப் பிரதேசத்தைப் பொறுத்தவரை அங்குள்ள மக்கள் பாஜக முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு எதிராக உள்ளார்கள். எனவே, 5 மாநிலங்களிலும் நாங்கள் ஆட்சி அமைப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு முழுமையாக உள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல், அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்டமாக இருக்குமா என கேட்கிறீர்கள். அவ்வாறு இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திலும் பிரச்சினைகள் வெவ்வேறாக இருக்கின்றன. அதன் அடிப்படையில்தான் மக்கள் வாக்களிப்பார்கள். சட்டப்பேரவைத் தேர்தலில் இருந்து நாடாளுமன்றத் தேர்தல் மிகவும் வித்தியாசமானது. உள்ளூர் அளவில் தங்கள் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணக் கூடிய தலைவர்களுக்கே மக்கள் வாக்களிப்பார்கள். இந்த 5 மாநில தேர்தல்களுக்கு பிறகே இந்தியா கூட்டணியின் தொகுதிப் பங்கீட்டுப் பணிகள் தொடங்கும்” என தெரிவித்தார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *