செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,320 கனஅடியாக உயர்வு

மேட்டூர், நவ. 15–

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3,320 கனஅடியாக உயர்ந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டமும் இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.41 அடியாக உயர்ந்துள்ளது.

காவிரியின் நீர் பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழை காரணமாக, மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 3,297 கன அடியிலிருந்து வினாடிக்கு 3,320 கன அடியாக சற்று அதிகரித்துள்ளது.

நீர்மட்டம் உயர்வு

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 250 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீர் இருப்பு 24.99 டிஎம்சியாக உள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 8 மணி நிலவரப்படி 60.41 அடியாக உயர்ந்துள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *