நல்வாழ்வுச் சிந்தனை
* உருளைக்கிழங்கு “ஸ்கர்வி” என்னும் ரத்தப் போக்கை உண்டாக்கும் நோய்க்கு மிகச்சிறந்த தீர்வு ஆகும். “ஸ்கர்வி” என்னும் நோய் விட்டமின் சி சத்து குறைபாட்டால் ஏற்படும் ஓர் நோய் ஆகும். இதனால் ஈறுகளினின்று எளிதில் ரத்தம் வெளியேறுதல் அல்லது எங்கேனும் அடிபட்ட போது அதிக ரத்தப்போக்கு ஆகியன உண்டாகும். குழந்தைகளுக்கு ஏற்படும் “ஸ்கர்வி” நோய்க்கு உருளைக்கிழங்கு சாறு அல்லது உருளைக்கிழங்கு அரைத்து பசையாக உள்ளுக்குப் கொடுப்பது ஓர் நல்ல தீர்வாகும். புளிக்காய் உண்பது “ஸ்கர்வி” நோய்க்கு மிகவும் சிறந்தது என்று ஏற்கனவே நாம் பார்த்ததை இங்கே நினைவு படுத்திக் கொள்ள வேண்டும்.
* அரை கப் உருளைக்கிழங்கு சாறு இரண்டு அல்லது மூன்று வேளை ஒரு நாளைக்கு என உணவுக்கு முன் எடுப்பதால் வயிறு மற்றும் இரையறைக் கோளாறுகள் விலகிப் போகின்றது. வாயு, அமிலம், வயிற்றுப்புண்கள் குணமாகிறது.
* உருளைக் கிழங்கு தோலைக் கொண்டு தீநீர் செய்து சாப்பிடுவதால் பித்தப்பை சம்பந்தமான தொல்லைகள் போக்கி ஈரலை பலப்படுத்தி உடலிலுள்ள நச்சுக்களை வெளியேற்ற உதவும்.
* உருளைக்கிழங்கு சாப்பிட்டால் பருமனாகிவிடுவோம் என்பது தவறு குறைவான அளவு எண்ணெய் சேர்த்தால் ஒன்றும் குற்றம் வராது என்பதை நினைவில் வைக்க வேண்டும்.