செய்திகள்

விதிமீறல்: பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு

சென்னை, மார்ச் 29–

தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 39 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும் ஏப்ரல் 19ந்தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் தற்போது தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கடந்த 25ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பின் கடநாடு கிராமத்தில் எந்தவித முன் அனுமதியும் இன்றி 100-க்கும் மேற்பட்டோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தியதாக எழுந்த புகாரின் பேரில் தேனாடுகம்பை போலீசார் எல்.முருகன் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *