செய்திகள்

மே மாதத்தில் நடக்கும் உற்சவங்கள்: திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு

திருப்பதி, ஏப்.30–

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே மாதத்தில் நடைபெற உள்ள விழாக்கள் குறித்து தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மே மாதம் பல்வேறு விழாக்கள் நடைபெற உள்ளது. அதன்படி, 3-ம் தேதி பாஷ்யகர்ல உற்சவம் தொடங்குகிறது. 4-ம் தேதி சர்வ ஏகாதசி, 10-ம் தேதி அட்சய திருதியை, 12-ம் தேதி பாஷ்யகர்ல சாற்றுமுறை, ராமானுஜ ஜெயந்தி, சங்கர ஜெயந்தி நடைபெற உள்ளது.

நரசிம்ம ஜெயந்தி

அதைத்தொடர்ந்து 17-ம் தேதி முதல் 19-ந் தேதி வரை பத்மாவதி பரிணய உற்சவம், 22-ம் தேதி நரசிம்ம ஜெயந்தி மற்றும் தரிகொண்டா வெங்க மாம்பா ஜெயந்தி, 23-ந் தேதி அன்னமாச்சாரியா ஜெயந்தி, கூர்ம ஜெயந்தி ஆகியவை தொடர்ந்து நடைபெற உள்ளதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

திருப்பதியில் நேற்று முன்தினம் 86,241 பேர் தரிசனம் செய்தனர். 31,730 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.65 கோடி உண்டியல் காணிக்கை வசூலானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *