செய்திகள்

மரணமடைந்து ஓராண்டு ஆன பின்பும் முஷாரப்பின் மரண தண்டணையை உறுதிசெய்த பாகிஸ்தான் சுப்ரீம்கோர்ட்

இஸ்லாமாபாத், ஜன. 11–

மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய மரண தண்டனையை, அவர் மறைந்து ஓராண்டுக்கு பிறகும் பாகிஸ்தான் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது.

பாகிஸ்தானில் கடந்த 2007-ஆம் ஆண்டு நெருக்கடி நிலையை முஷாரப் அறிவித்தார். அதற்காக அரசமைப்புச் சட்ட அமலாக்கத்தை அவர் நிறுத்திவைத்தார். இது தொடர்பாக நடைபெற்று வந்த தேசத்துரோக வழக்கில் முஷாரபுக்கு சிறப்பு நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு மரண தண்டனை விதித்தது.

மரணத்துக்கு பிறகும் தண்டனை

ஆனால், சிறப்பு நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பு அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று லாகூர் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இது தொடர்பான மனுவை விசாரித்து வந்த 5 நீதிபதிகள் அடங்கிய உச்சநீதிமன்ற அமர்வு, லாகூர் உயர்நீதிமன்றம் அளித்த உத்தரவு செல்லாது என்று அறிவித்தது.

இந்த நிலையில் மறைந்த முன்னாள் ராணுவ ஆட்சியாளர் ஜெனரல் பர்வேஸ் முஷாரபுக்கு 2019-ம் ஆண்டு சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தூக்கு தண்டனையை பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. துபையில் நாடு கடந்து வசித்து வந்த முஷாரஃப் (வயது 79), உடல்நலக் குறைவு காரணமாக கடந்த 2023 பிப்ரவரி 5-ந்தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *