தமிழ்நாட்டுக்கு ரூ.2,976 கோடி
புதுடெல்லி, நவ.8-
மாநிலங்களுக்கான மாதாந்திர வரிப்பகிர்வு 10-ந் தேதியை கணக்கிட்டு விடுவிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த முறை பண்டிகை காலத்தை முன்னிட்டு 3 நாட்கள் முன்னதாக வரிப்பகிர்வுத் தொகையை விடுவித்து இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதன்படி நவம்பர் மாதத்துக்கான வரிப்பகிர்வுத்தொகை ரூ.72,961.21 கோடியை, 10ந் தேதிக்கு பதிலாக 7ந் தேதி வெளியிட மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. இதில் தமிழ்நாட்டுக்கான பகிர்வுத்தொகை ரூ.2 ஆயிரத்து 976 கோடியே 10 லட்சம் ஆகும்.
அதிகபட்சமாக உத்தரபிரதேச மாநிலத்துக்கு ரூ.13 ஆயிரத்து 88 கோடியே 51 லட்சத்துக்கும், குறைந்தபட்சமாக கோவா மாநிலத்துக்கு ரூ.281 கோடியே 63 லட்சத்துக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.