புதுடெல்லி, பிப்.7-
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 31-ந்தேதி தொடங்கியது. ஆண்டின் முதலாவது கூட்டத்தொடர் என்பதால், இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றினார். அதனை தொடர்ந்து 1-ந்தேதி, இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதன் பின்னர் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இரு அவைகளிலும் விவாதம் நடத்தப்பட்டது. அந்த விவாதத்துக்கு நேற்று முன்தினம் மக்களவையில் பிரதமர் மோடி பதிலளித்தார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 9-ந்தேதியுடன் முடிவடைவதாக இருந்தது. இந்த நிலையில் கூட்டத்தொடர் ஒருநாள் நீட்டிக்கப்படுவதாக நாடாளுமன்ற விவகாரத்துறை மந்திரி பிரகலாத் ஜோஷி நேற்று அறிவித்தார்.
முந்தைய காங்கிரஸ் தலைமை யிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் கீழ் பொருளா தாரத்தின் நிலை குறித்து ‘வெள்ளை அறிக்கை’ தாக்கல் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாகவும், அதன் காரணமாகவே கூட்டத்தொடர் நீட்டிக்கப் பட்டுள்ளதாகவும் தெரிகிறது.