தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, டிச.6–
சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளையும் (7–ந் தேதி) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
‘மிக்ஜாம்’ புயல் காரணமாக ஏற்பட்ட கனமழையால் சென்னை, மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு 4–ந் தேதி முதல் 6–ந் தேதி வரை தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்திருந்தது.
புயல் வெள்ளம் பாதித்த சில பகுதிகளில் நிவாரணப்பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மாணவர்கள் நலன் கருதி, நாளை (7–ந் தேதி) சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு தமிழ்நாடு அரசு விடுமுறை அறிவித்துள்ளது.