செய்திகள்

சிபிஐ, அமலாக்கத்துறை இயக்குநர்களை மாற்ற வேண்டும்: திரிணாமுல் போராட்டம்

கொல்கத்தா, ஏப். 09–

சிபிஐ, அமலாக்கத்துறை உள்ளிட்ட ஒன்றிய விசாரணை அமைப்புகளின் தலைவர்களை மாற்றக் கோரி, தேர்தல் ஆணைய அலுவலகத்துக்கு வெளியே போராட்டம் நடத்திய திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் கைது செய்யப்பட்ட நிலையில், இரவு முழுவதும் டெல்லி காவல் நிலைய வளாகத்தில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

ஒன்றிய பாஜக அரசின் அழுத்தத்தில் எதிர்க்கட்சிகளை, அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட விசாரணை அமைப்புகள் குறிவைப்பதாக மேற்குவங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடா்ந்து குற்றஞ்சாட்டி வருகிறது.

தேர்தல் ஆணையத்தில் போராட்டம்

இதனிடையே, அந்த மாநிலத்தின் மிதுனபுரி மாவட்டத்தில் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றவாளிகளைக் கைது செய்ய சென்ற தேசிய புலனாய்வு முகமை(என்ஐஏ) அதிகாரிகள் குழு மீது தாக்குதல் நடந்தது. அதே நேரத்தில் அந்த கிராமத்தினரை என்ஐஏ அதிகாரிகள் கொடுமைப்படுத்தியதாக முதலமைச்சர் மம்தா பானா்ஜி குற்றம் சுமத்தினார். மேலும், என்ஐஏ மற்றும் பாஜக இடையே கூட்டணி உள்ளதாகவும் திரிணமூல் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

இச்சூழலில், திரிணமூல் காங்கிரஸ் நிர்வாகிகள் டெரிக் ஓ பிரையன், டோலா சென், சாகெட் கோகலே, சாகரிகா கோஷ் ஆகியோர் தேர்தல் ஆணைய அதிகாரிகளை நேற்று சந்தித்து, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்தனர். தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் ஆணைய அலுவலகம் எதிரே 24 மணிநேரப் போராட்டத்தையும் தொடங்கினர்.

இதையடுத்து, காவல் துறையினர் அவர்களை கைது செய்து தடுப்புக் காவலில் வைத்தனர். பின்னர் அவா்கள் விடுவிக்கப்பட்டனர். இருப்பினும், காவல் நிலைய வளாகத்தில் அமர்ந்து விடிய விடிய தர்னா போராட்டத்தில் திரிணமூல் காங்கிரஸ் எம்பிக்கள் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *