செய்திகள்

சிங்கப்பூர் சட்ட அமைச்சர் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு

சென்னை, ஜன. 12–

அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டுக்கு வருகை தந்த சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகம், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,

‘‘சென்ற ஆண்டு சிங்கப்பூர் பயணத்தின்போது நான் விடுத்த அழைப்பை ஏற்று, அயலகத் தமிழர் தின விழாவில் பங்கேற்கத் தமிழ்நாட்டுக்கு வந்துள்ள சிங்கப்பூர் நாட்டின் சட்டம் மற்றும் உள்துறை அமைச்சர் கே.சண்முகத்தை எனது இல்லத்தில் வரவேற்று மகிழ்ந்தேன்.

உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024–ன் வெற்றியைத் தொடர்ந்து நடைபெற்றுள்ள எங்களின் இந்தச் சந்திப்பு கல்வி – பண்பாடு – தொழில் எனப் பல்வேறு தளங்களில் வளர்ந்து, நாட்டுக்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் பயனளிக்கும் என நம்புகிறேன்’ என்று கூறியுள்ளார்.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *