செய்திகள்

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் வசூல் ரூ.73 லட்சம்; 1 3/4 கிலோ தங்கமும் காணிக்கை

திருச்சி, டிச. 8–

சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கையாக சுமார் ரூ. 73 லட்சம் பக்தர்கள் செலுத்தியுள்ளனர்.

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோயிலுக்கு தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, வெளி மாநிலங்களில் இருந்தும் நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அவ்வாறு செல்லும் பக்தர்கள் நேர்த்தி கடனாக உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர்.

ரூ.73 லட்சம் காணிக்கை

சமயபுரம் மாரியம்மன் பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை, கோயில் நிர்வாகம் சார்பில் மாதம் இருமுறை எண்ணப்படுவது வழக்கம். அதன்படி கோயில் இணை ஆணையர் முன்னிலையில் பக்தர்கள் காணிக்கை செலுத்திய உண்டியல்கள் திறக்கப்பட்டு எண்ணப்பட்டன.

அதில் ரூ. 72 லட்சத்து 75 ஆயிரத்து 692 ரூபாய் ரொக்கமும், 1.788 கிலோ தங்கமும், 2.481 கிலோ வெள்ளியும், 188 அயல்நாட்டு நோட்டுகளும், 692 அயல்நாட்டு நாணயங்களும் காணிக்கையாக கிடைத்தன என்று கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *