நீலகிரி, டிச. 9–
நீலகிரி மாவட்டத்திற்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதன் காரணமாக, உதகை மலை ரெயில் சேவை மேலும் 2 நாள்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக மலை ரயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகளால் கடந்த நவம்பர் 22 ஆம் தேதி முதல் ஊட்டி-குன்னூர் இடையேயான மலை ரெயில் சேவை கடந்த வாரம் ரத்து செய்யப்பட்டது.
மேலும் 2 நாளுக்கு ரத்து
சீரமைப்புப் பணிகள் நிறைவடைந்த பின்னர், நேற்று மீண்டும் ரெயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் கனமழை எச்சரிக்கை காரணமாக ரத்தானது.
இதையடுத்து கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பாதுகாப்பு கருதி, மேலும் இரண்டு நாள்களுக்கு 10 ந்தேதி வரை ஊட்டி மலை ரெயில் சேவை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.