செய்திகள்

இருளில் மூழ்கிய இலங்கை: விடிய விடிய மக்கள் கடும் அவதி

கொழும்பு, டிச.10–

இலங்கை முழுவதும் திடீர் மின் தடை ஏற்பட்டதால் மக்கள் கடும் அவதியடைந்தனர்.

இலங்கையில் மின் வினியோக பாதையில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக மின்சார சப்ளையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக இலங்கை முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கியது.

இதனால் மக்கள் விடிய விடிய தூங்காமல் தவித்தனர். மின்சாரம் வழங்குவதற்கான நடவடிக்கையில் அதிகாரிகள் தீவிரமாக ஈடுபட்டனர்.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சார வினியோகத்தை சீர் செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கையில் மின்சார அமைப்பு தெரிவித்தது.

பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த இலங்கை, அதிலிருந்து மீண்டு வந்தது.

இந்த நிலையில் இலங்கையில் மின் வினியோக பாதையில் கோளாறு காரணமாக மின்தடை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இணைய சேவை முற்றிலும் முடங்கியுள்ளது.

மின்சாரத்தை வழங்குவதற்கான நடவடிக்கையில் இலங்கை மின்சார வாரியம் ஈடுபட்டுள்ளது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *