ஊட்டி, நவ. 19–
மேட்டுப்பாளையம் மற்றும் உதகை இடையேயான மலை ரெயில் சேவை இன்று முதல் மீண்டும் தொடங்கியது.
நீலகிரியில் பெய்த கனமழையால் ஊட்டி மலை ரெயில் பாதையில் ஏற்பட்ட மண் சரிவுகள் காரணமாக கடந்த 10 ஆம் தேதி முதல் 18 ம் தேதி வரை ஊட்டி– மேட்டுப்பாளையம் மலை ரெயில் போக்குவரத்து ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இன்று தொடக்கம்
இதனையடுத்து ஊட்டி மலை ரயில் பாதையில் ஏற்பட்ட பாதிப்புகளை சீரமைக்கும் பணி நடைபெற்றது. நேற்றோடு சீரமைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று முதல் மீண்டும் மேட்டுப்பாளையும்–ஊட்டி இடையேயான மலை ரெயில் சேவை தொடங்கியது.