செய்திகள்

இந்தோனேசியாவில் 6 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: மக்கள் பதற்றம்

ஜகார்த்தா, ஏப். 09–

இந்தோனேசியா நாட்டின் ரான்சிகி பகுதியில் 6.0 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் பொதுமக்கள் பதற்றம் அடைந்தனர்.

உலகின் பல்வேறு நகரங்களில் அவ்வப்போது நிலநடுக்கங்கள் போன்ற இயற்கை பேரிடர்கள் நடைபெற்று வந்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்தோனேசியா நாட்டின் ரான்சிகி பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. நிலத்திற்கு அடியில் 9.1 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 6.0 ஆக பதிவாகியுள்ளது.

வீடுகள் அதிர்ந்தது

நிலநடுக்கத்தால் வீடுகள் லேசாக அதிர்ந்தது. இதனால் அச்சமடைந்த மக்கள் சாலைகளில் தஞ்சம் அடைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அங்கு சுனாமி எச்சரிக்கை எதுவும் பிறப்பிக்கப்படவில்லை. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து தற்போது வரை தகவல் வெளியாகவில்லை. இருப்பினும் சில இடங்களில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

Loading

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *