செய்திகள்

இன்னும் 5 நாட்களில் மீண்டும் இணைய சேவை: மணிப்பூர் முதல்வர் உறுதி

இம்பால், அக்.19– மணிப்பூரில் இன்னும் நான்கு ஐந்து நாட்களில் இணைய சேவை மீண்டும் வழங்கப்படும் என்று மாநில முதல்வர் என்.பிரேன் சிங் தெரிவித்துள்ளார். அமைச்சரவைக் கூட்டத்துக்கு பின்னர், நாகாக்களின் ஆதிக்கம் அதிகமுள்ள உக்ரூல் மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் பிரேன் சிங், “இணைய சேவை இல்லாமல் மக்கள் சந்தித்துவரும் அவதியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் சில சக்திகள் சூழ்நிலையைத் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பிரச்சினைகளை உருவாக்குவதால் இணைய சேவையைத் தடை செய்யப்பட்டுள்ளது. இன்னும் […]

Loading

செய்திகள்

13-வது நாளாக நீடிக்கும் போர் இஸ்ரேல் வந்தார் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக்

ஜெருசலேம் அக். 19– பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் இன்று இஸ்ரேல் வந்தடைந்தார். அங்கு அந்நாட்டு அதிபர், பிரதமர் ஆகியோரை சந்தித்து பேச உள்ளார். ஹமாசின் கட்டுப்பாட்டில் உள்ள காசாவை 13-வது நாளாக இஸ்ரேல் ராணுவம் தாக்கி வருகிறது. இஸ்ரேலுக்கு அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளும், பாலஸ்தீனத்துக்கு அரபு நாடுகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த போர் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், இரு தரப்பிலும் இதுவரை ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல்–ஹமாஸ் இடையேயான போர் நாளுக்கு நாள் தீவிரம் […]

Loading

செய்திகள்

பீகார் மாநிலத்தைத் தொடர்ந்து சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த ஆந்திர மாநில அரசும் முடிவு

நவம்பர் 15 ந்தேதி தொடங்கும் என அறிவிப்பு அமராவதி, அக். 19– பீகாரில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அறிக்கை வெளியிடப்பட்ட நிலையில், அதைத்தொடர்ந்து ஆந்திர மாநிலத்தை ஆட்சி செய்து வரும் ஜெகன்மோகன் ரெட்டி அரசும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி, நவம்பர் 15ந்தேதி ஆந்திர மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு எடுக்கும் பணி தொடங்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அமராவதியில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஆந்திர மாநில […]

Loading

செய்திகள்

ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் சம்பளம் போனஸ்: மத்திய மந்திரி சபை கூட்டத்தில் ஒப்புதல்

புதுடெல்லி, அக்.19-– பிரதமர் மோடி தலைமையில் மத்திய மந்திரிசபை கூட்டம் நடந்தது. அதில், முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதுகுறித்து மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:- அரசிதழ் பதிவு பெறாத, தகுதி யுடைய ரெயில்வே ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் வழங்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. அவர்களுக்கு 78 நாட்கள் சம்பளத்துக்கு இணையான போனஸ் வழங்கப்படும். தண்டவாள பராமரிப்பாளர், லோகோ பைலட், கார்டுகள், நிலைய அதிகாரிகள், சூப்பர்வைசர்கள், டெக்னீஷியன்கள், […]

Loading

செய்திகள்

ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம்: ஒரே நாளில் ரூ. 22 லட்சம் அபராதம் வசூல்

சென்னை, அக். 19– ரெயிலில் டிக்கெட் இல்லாமல் பயணம் செய்தவர்களிடமிருந்து நேற்று ஒரே நாளில் ரூ. 22 லட்சம் அபராதம் வசூல் செய்யப்பட்டது. ரெயில்களில் டிக்கெட் எடுக்காமல் ஓசி பயணம் செல்பவர்களை டிக்கெட் பரிசோதகர்கள் அவ்வப்போது பிடித்து அபராதம் விதித்தாலும் ஓசி பயணம் செய்வதில் பலர் ஆர்வம் காட்டத்தான் செய்கிறார்கள். நேற்று முன்தினம் ஒரே நாளில் தென்னக ரெயில்வே 31 டிக்கெட் பரிசோதனை குழுவினர் மூலம் தீவிர சோதனை நடத்தியது. இந்த சோதனை சென்னை சென்ட்ரல், பெரம்பூர், […]

Loading

செய்திகள்

அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, அக். 19– அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, ஜாமீன் வழங்க மறுப்பு தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம் அவருடைய மனுவை தள்ளுபடி செய்துள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் அமலாக்கத்துறையால் கடந்த ஜூன் மாதம் 14 -ம் தேதி கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி, தற்போது நீதிமன்றக் காவலில் இருந்து வருகிறார். முன்னதாக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை கடந்த செப்டம்பர் 20 -ம் தேதி […]

Loading

செய்திகள்

ககன்யான் சோதனை ராக்கெட் 21-ந்தேதி விண்ணில் பாய்கிறது

சென்னை, அக்.19-– மனிதனை விண்ணுக்கு அழைத்து செல்லும் ககன்யான் ராக்கெட்டின் முதல் சோதனை ராக்கெட் வருகிற 21-ந்தேதி (சனிக்கிழமை) காலை 7 மணிக்கு விண்ணில் பாய்கிறது என்று இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினர். விண்ணில் 400 கிலோ மீட்டர் சுற்றுவட்டப் பாதைக்கு மனிதக் குழுவினரை அனுப்பி, அவர்களைப் பத்திரமாக பூமிக்குக் திருப்பி அழைத்து வரும் ககன்யான் திட்டத்தை வருகிற 2025-ம் ஆண்டு செயல்படுத்த இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டு உள்ளது. இதற்கான சோதனை ராக்கெட்டு களை […]

Loading

செய்திகள்

இந்தியாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா: உயிரிழப்பு இல்லை

டெல்லி, அக். 19– இந்தியாவில் புதிதாக 48 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 307 ஆக உள்ளது. இந்தியாவில் கொரோனா பாதிப்பு விவரங்களை ஒன்றிய மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன்படி, நேற்று முன்தினம் 38 பேருக்கு கொரோனா பாதித்த நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 48 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தொற்று பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 4,49,99,728 […]

Loading

செய்திகள்

தெலங்கானாவில் பாம்பை கொத்தவிட்டு கணவனை கொலைசெய்த மனைவி கைது

ஐதராபாத், அக். 18– தெலங்கானாவில் பாம்பை ஏவி கொத்தவிட்டு கணவனை கொலை செய்த மனைவி அவருடைய கூட்டாளிகளை போலீசார் கைது செய்தனர். தெலங்கானா மாநிலம் மார்கண்டேய பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன். இவரது மனைவி லலிதா. இந்த தம்பதிக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். பிரவீன் தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர்களுக்கு செல்லும்போது, அவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது மனைவி லலிதாவிற்கு தெரியவந்ததால் அடிக்கடி தம்பதிக்குள் தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. மனைவி, கூட்டாளிகள் […]

Loading

செய்திகள்

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 உயர்வு

சென்னை, அக். 18– சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ரூ.44,480 க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலை அண்மை காலமாக உயர்ந்து வந்த நிலையில் கடந்த மாதத்தில் படிப்படியாக குறைந்து வந்தது. இந்நிலையில் மீண்டும் குறைந்த அளவில் தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்தது. இந்நிலையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.360 உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் ரூ.5,560-க்கும், சவரன் ரூ.44,480 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல், […]

Loading