செய்திகள்

தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.320 உயர்வு

சென்னை, டிச. 03– ஆபரணத் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாகவே இறங்குமுகத்தில் இருந்த நிலையில் இன்று சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.57,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. நவம்பர் மாத தொடக்கம் முதலே முதல் தங்கம் விலை சற்று ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது. இதனைத் தொடர்ந்து ஆபரணத் தங்கத்தின் விலை டிசம்பர் மாதம் தொடக்கம் முதலே இறங்குமுகத்தில் இருந்து வந்தது. சவரனுக்கு […]

Loading

செய்திகள்

50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தூரத்தை 3 கி.மீ. வேகத்தில் 5 நாட்களாக கடந்த பெஞ்ஜல் புயல்

சென்னை, டிச. 3– தமிழக புயல் வரலாற்றில் 50 ஆண்டுகளில் இல்லாத வகையில் 500 கி.மீ. தூரத்தை சுமார் 3 கி.மீ. வேகத்தில் பெஞ்ஜல் புயல் மிக மெதுவாக 5 நாட்களாக கடந்துள்ளது. வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் கடந்த சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் மகாபலிபுரம் – புதுச்சேரி அருகே கரையை கடந்தது. தொடர்ந்து மேற்கு–தென் மேற்கில் பயணித்த புயல் புதுச்சேரி, விழுப்புரம் பகுதிகளில் நிலைகொண்டது. புயல் கரையை கடக்கும் போது செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம் […]

Loading

செய்திகள்

இலங்கை கடற்படையின் தொடரும் அட்டூழியம்: காரைக்கால் மீனவர்கள் 18 பேர் கைது

சென்னை, டிச. 3– எல்லை தாண்டி மீன் பிடித்ததாக காரைக்கால் மீனவர்கள் 18 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. தமிழகம் மற்றும் புதுவையைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வருகிறது. அதோடு மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்படும் சூழலும் நிலவி வருகிறது. இந்த […]

Loading

செய்திகள்

ஐஐடி, ஐஐஎம்-களில் ஆசிரியர் பணியிட இட ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததா?

தகவல் அறியும் உரிமை சட்டத்தில் வெளியான விவரங்கள் டெல்லி, டிச. 03– நாட்டில் உள்ள 8 ஐஐடி மற்றும் 7 ஐஐஎம் கல்வி நிறுவனங்களில் 80 சதவீத ஆசிரியர் பணியிடங்களின் இட ஒதுக்கீட்டு விதிகள் முறைகேடாக மீறப்பட்டு பொதுப்பிரிவினருக்கே கிடைக்கப்பெற்றுள்ளதாக ஆய்வுகள் வாயிலாக தெரியவருகிறது. இடஒதுக்கீட்டின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கு சொந்தமான கல்வி நிறுவனங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீதமும், பட்டியலினத்தவர்களுக்கு 15 சதவீதமும், பழங்குடியினத்தவருக்கு 7.5 சதவீதமும் பணியாளர்கள் நியமிக்கப்பட வேண்டும். ஆனால் இவ்வாறாக […]

Loading

செய்திகள்

ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரிப்பு

பரிசல் இயக்க தடை மேட்டூர், டிச. 3– காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக ஒகேனக்கல் அருவியில் நீர்வரத்து 25 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவிகளில் குளிப்பதற்கும், காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும் தடை செய்யப்பட்டுள்ளது. பெஞ்ஜல் புயல் காரணமாக காவிரி துணை நதிகளான பாலாறு, சின்னாறு, தொப்பையாறு நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை கொட்டியது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து தொடர்ந்து அதிகரித்து வண்ணம் உள்ளது. நேற்று […]

Loading

செய்திகள்

ஆளுநர் நிகழ்ச்சியில் மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்து சர்ச்சை

மதுரை, டிச. 02– மதுரையில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டு இடையில் நிறுத்தப்பட்டதால் மீண்டும் சர்ச்சையானது. தமிழ்நாட்டில் அரசு விழாக்கள், கல்வி நிலையங்கள், பொது நிறுவனங்கள் மற்றும் பொது நிகழ்ச்சிகளின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல் பாடப்பட வேண்டும் என்றும் நிகழ்ச்சியின் நிறைவாக தேசிய கீதம் பாடப்பட வேண்டும் என்பது தமிழ்நாடு அரசின் ஆணையாக உள்ளது. மிக நீண்ட காலமாக இந்த முறை பள்ளிகளில் மட்டுமல்லாது, அரசு நிகழ்ச்சிகளிலும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. […]

Loading

செய்திகள்

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூரில் 344 ஏரிகள் நிரம்பின

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடு உயர்வு சென்னை, டிச.2– சென்னையில் பெய்து வரும் மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருவதால் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள 344 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. வங்கக்கடலில் உருவான பெஞ்ஜல் புயல் காரணமாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களாக காற்றுடன் கனமழை கொட்டியது. இதன் காரணமாக சென்னைக்கு […]

Loading

செய்திகள்

கால்பந்து போட்டியில் ரசிகர்கள் இடையே மோதல்: 100 பேர் பலி

என்சரிகோர், டிச. 2– கினியா நாட்டில் நடந்த உள்ளூர் கால்பந்து போட்டியில் நடுவரின் தவறான தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்த ஒரு தரப்பு ரசிகர்கள் மைதானத்தை ஆக்கிரமித்தனர். இதனையடுத்து மற்றொரு தரப்பினரும் மைதானத்திற்குள் புகுந்து ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மேற்கு ஆப்ரிக்க நாடான கினியாவின் 2வது பெரிய நகரம் என்சரிகோர். இங்கு நேற்று உள்ளூர் கால்பந்து போட்டி ஒன்று நடைபெற்றது. இதனை ஆயிரத்திற்கு மேற்பட்ட ரசிகர்கள் பார்த்து ரசித்தனர். போட்டியில் நடுவர் தவறான […]

Loading

செய்திகள்

கிருஷ்ணகிரியில் வரலாறு காணாத மழை: ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவு

* கார்கள் அடித்து செல்லப்பட்டன * வீடுகளுக்குள் வெள்ளம் கிருஷ்ணகிரி, டிச.2– கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் விடிய, விடிய பெய்த கனமழையால் சுற்றியுள்ள ஏரிகள் நிரம்பி, உபரி நீர் நகருக்குள் புகுந்ததுள்ளதால் வெள்ளக்காடானது. ஊத்தங்கரையில் 16 மணி நேரமாக தொடர்ந்து மழை பெய்ததால், குடியிருப்பு பகுதிகளில் இடுப்பு அளவுக்கு தண்ணீர் தேங்கி உள்ளது. ஊத்தங்கரையில் 50 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த பெஞ்ஜல் புயல் நேற்று முன்தினம் இரவு புதுச்சேரி அருகே […]

Loading

செய்திகள்

டாலரை பயன்படுத்தாத நாடுகள் மீது 100 விழுக்காடு வரி விதிக்கப்படும்

அமெரிக்காவின் அடுத்த அதிபர் டிரம்ப் எச்சரிக்கை நியூயார்க், டிச. 02– அமெரிக்க டாலருக்கு மாற்றாக வேறு நாணயங்களை பயன்படுத்தும் நாடுகள் மீது 100 சதவீத வரி விதிக்கப்படும் என அமெரிக்காவின் அடுத்த அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா ஆகிய நாடுகள் ஒன்றிணைந்து உருவாக்கப்பட்ட அமைப்பு தான் பிரிக்ஸ் கூட்டமைப்பு. கடந்த 2009 ஆம் ஆண்டு இந்த அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் 2010 ஆம் ஆண்டு தென் […]

Loading